tamilnadu

img

மின்சாரம் தாக்கி கணவன் இறந்ததால் அனாதையாய் நிற்கிறேன்

கோவை, ஜூன் 3-மின்சாரம் தாக்கி கணவர் இறந்த நிலையில் உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண் கண்ணீருடன் மனு அளித்துள்ளார். திருச்சி அருகே மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மணைவி லட்சுமி. இத்தம்பதியினருக்கு ரகுபதி, ரேவதி, தமிழ்செல்வி என்கிறமூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவை  வந்த இக்குடும்பத்தினர் வடவள்ளி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். குழந்தைகள் மூவரும் வடவள்ளியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் ஒண்டிப்புதூர் அருகே கட்டுமான பணிக்கு கொத்தனார் பழனிசாமி என்பவர் மூலம் பெரியசாமி சென்றுள்ளார். பணித்தளத்தில் பெரியசாமி கடப்பாரையால் மண்ணைத் தோண்டியுள்ளார். அப்போது நிலத்தின் அடியில்பதிக்கப்பட்டிருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் மாணிக்கவாசகம் இழப்பீட்டுத் தொகையாக அவரது குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அதனை அவரது வழக்கறிஞர் மூலம் காசோலையாக கொடுத்துவிட்டு காசோலையின் நகலை மட்டும் லட்சுமியிடம் வழங்கினர். ஆனால் தற்போதுவரை அந்த பணம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.  இந்நிலையில் தற்போது வாழ வழியின்றிதவித்து வருகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து தனக்கும்,தன் குழந்தைகளின்  வாழ்வாதாரத்திற்கும் வழி வகை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.