திருப்பூர், பிப். 12- திருப்பூர் அனுப்பர்பாளையம் வட் டார பித்தளைப் பாத்திரத் தொழிலா ளர்களுக்கான புதிய சம்பள உயர்வுக் கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பாத்திர பட்டறை தொழிலாளர்க ளுக்கு புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவது பற்றி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக இருத ரப்புப் பேச்சுவார்த்தை கடந்த ஜன. 27 ஆம் தேதி முதல் பல கட்டங்களாக நடைபெற்ற போதிலும் எந்த முன்னேற் றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பித்தளைப் பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர் பாக கடந்த ஜன.29ஆம்தேதி நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் புதிய ஒப்பந்தம் நிறைவேற்ற பாத்திர உற்பத்தியாளர்கள் ஆறு மாத கால அவகாசம் கோரினர். இதை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்புத் தெரி வித்து விட்டனர். இதையடுத்து பித்தளைப் பாத்திர தொழிலாளர்களுக்கான 2ஆம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த பிப்.4ஆம் தேதி நடைபெற்றது. அப்போது உற்பத்தி யாளர்கள் தரப்பில் 5 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர். இதேபோல் 60 சதவீத சம்பள உயர்வு கோரி இருந்த தொழிற்சங்கங்கள் 57 சதவிகிதம் வேண்டும் என்று வலியு றுத்தினர். இதில் முடிவு காணாமல் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்.11ஆம் தேதி செவ்வாயன்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில், உற்பத்தியாளர் தரப் பில் 8 சதவிகிதம் வரை மட்டுமே கூடு தலாக வழங்கமுடியும் என தெரிவித்த னர். இதை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன. இதனால் இப்பேச்சு வார்த்தையும் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஒரு வாரத்திற்குள் நடைபெ றும் என்றும் கூறப்பட்டுள்ளது.