tamilnadu

img

அதிமுக கொடி மரம் விழுந்து இளம்பெண் படுகாயம் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

கோவை. நவ.14- கோவையில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்து விழுந்து பெண் படுகாயமடைந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி போராட் டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை கோல்டுவின்ஸ் பகுதி யில் கடந்த நவ.11 ஆம் தேதியன்று அதிமுக கொடிகம்பம் சாய்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த அனுராதா (எ) ராஜேஸ்வரி என்ற இளம்பெண் மற்றும் வாலிபர் ஒரு வர்லாரியில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று திமுக மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டமன்ற உருப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் விபத்திற்கு காரண மானவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கவும், உண்மை குற்ற வாளிகளை தப்பிக்க வைக்கும் காவல்துறை மற்றும் அதிமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி நா.கார்த்திக் எம்எல்ஏ, திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப் பாளர் தென்றல் செல்வராஜ், மாநகர் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி.நாச்சி முத்து உள்ளிட்ட 250க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டனர்.