தருமபுரி, ஜூலை 1- தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் பைபாஸ் சாலையில் ஒட்டப்பட்டி அருகே அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த கல் லூரியாகும். இங்கு ஆயி ரக்கணக்கான மாணவ, மாணவிகள் மாவட் டத்தின் பல பகுதிக ளில் இருந்து வந்து படிக்கின்றனர். இந்த நிலையில் கல் லூரியில் உள்ள கழிப் பறை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மேலும் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதாலும் கழிப்பறை யின் கான்க்ரீட் மேற்கூரைகள் இடிந்து விழுகிறது. இதனால் கழிவறையைப் பயன்படுத்தும் மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் பராமரிப்பற்று பாதுகாப்பற்ற நிலை யில் இருக்கக்கூடிய அனைத்து வகுப்பறை உள்ளிட்ட பிற கட்டிடங்களுக்குள் மாணவ, மாணவிகள் நுழைவதற்கே அச்சப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர் நலனில் அக்கறை உள்ள அரசும், நிர்வா கமும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் பரா மரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கல் லூரி மாணவ, மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.