tamilnadu

தருமபுரி மற்றும் இளம்பிள்ளை முக்கிய செய்திகள்

தரைமட்ட பாலம் சீரமைப்பு-பொதுமக்கள் வரவேற்பு

இளம்பிள்ளை, பிப்.11- அக்கரபாளையம் பகுதியில் தரைமட்ட பாலம் சீரமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.  சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், அக்கரபாளையம் ஊராட்சி பகுதியில் திருமணிமுத்தாற்றில் தரை மட்ட பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கான்கீரிட் தூண் மற்றும் இரும்பு தகரம் கொண்டு அமைக்கப்பட்டது.  இந்த  பாலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங் களில் பெரிய அளவில் ஓட்டைகள்  ஏற்பட்டி ருந்தன. இதனால் பாலத்தின் வழியே   லட்சுமனூர் பகுதிக்கு செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டுநர்கள் ஏதாவது விபத்து நடந்து விடுமோ என்ற அச்சத்துடன் சென்று வந்தனர்.  இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரும்பு தகரம் கொண்டு ஓட்டையை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உழவர் கடன் அட்டை:  பயன்பெற ஆட்சியர் அழைப்பு

தருமபுரி, பிப்.11- பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ்  பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட்  கார்டு (உழவர் கடன்அட்டை) சென்றடைய திட்டமிட் டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து  தகுதியான விவசாயிகளுக்கு  இடுபொருள் மற்றும் பிற  தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டிற்கு ரூ.6  ஆயிரம் நிதி உதவி அளித்து வருகிறது. மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற்ற அனைத்து பயனாளிகளுக்கும் பிற  நிதித் தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்யும் நோக் கில் உழவர் கடன் அட்டை திட்டத்தில் வங்கிகள் மூலம்  வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்  பயன்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும்  வகையில்  அனைத்து வங்கிக் கிளைகளிலும்15 நாட்க ளுக்கு சிறப்பு முகாம்கள் வரும் 24.02.2020 வரை ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே,விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிக் கிளையை தங்களுடைய ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம்  மற்றும் நில ஆவணங்களு டன் அணுகி பயன்பெறலாம். மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்புக்கும் உழவர் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. எனவே பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட் டத்தின் கீழ் பயன்பெற்ற உழவர் கடன் அட்டை திட்டத் தின் கீழ் பயன்பெறாத அனைத்து விவசாயிகளும் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிக் கிளையை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறலாம்  என தருமபுரி மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழி கேட்டுக்கொண்டுள்ளார்.