tamilnadu

தருமபுரி ,சேலம் முக்கிய செய்திகள்

நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைவதை  தடுக்க ஆமணக்கு செடி வளர்ப்பு

 தருமபுரி, அக்.1- தருமபுரி மாவட்டத்தில் விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் நுழைவதை தடுக்க, ஆமணக்கு செடிகளை வளர்க்க வேண்டுமென வேளாண் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.  தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகே னக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப் பட்டி மற்றும் மஞ்சவாடி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, மான்,  மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை என பல்வேறு  வகையான வன விலங்கினங்கள் உள்ளன. வனப்பகுதியில், தீவன வசதி கிடைக்காமல் காட்டுப் பன்றி அருகே இருக்கும் விவசாய நிலத்திற்குள் புகுந்து  பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் பென்னாகரம், பவளத்தூர், ஆதனூர், பளிச்செட்டிஅள்ளி, நல்லம்பள்ளி, தொப்பூர், புறவடை, பண்டஅள்ளி, கருபையனஅள்ளி, பஞ்சப் பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வனப்பகுதி ஒட்டிய விளைநிலங்களில் காட்டுப்பன்றி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். நிலக்கடலை பயிர் வாசனைக்கு வனப்பகுதியில் இருந்து காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து, பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பயிர் சேதத்தை தவிர்க்க விவசாயிகள் தங்களுடைய பழைய துணிகளை, தோட்டத்தில் கட்டி பறக்கவிடு கின்றனர். இதை பார்த்து காட்டுப்பன்றி விளைநிலங் களுக்குள் வருவது குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து வேளாண் அதிகாரி குணசேகரன் கூறுகையில், காட்டுப்பன்றி தொல்லை மற்றும் பயிர்களை சேதப்படுத்தும் சுற்றுவட்டார பகுதியில் ஆமணக்கு செடி வளர்த்தால், காட்டுப்பன்றிகள் வருவ தில்லை. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வரும் காட்டுப் பன்றிகளுக்கு ஆமணக்கு வாசனை வந்தவுடன், விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவது தவிர்க்கப் படுகிறது என தெரிவித்தார்.

கல்வி பயிற்றுவிப்பாளா் உடற்தகுதி  தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

சேலம், அக்.1- இந்திய விமானப் படையில் கல்வி பயிற்று விப்பாளா் பணிக்கான உடற்தகுதி தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் நடைபெறுவதாக சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தார். இதுகுறித்து அவா், திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய விமானப்படையில் கல்வி பயிற்றுவிப்பாளா் பணிக்கான ஆள்சோ்ப்பு முகாம், கோவை பாரதியார் பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கில் அக்டோபா் 17-ஆம் தேதி முதல் அக்டோபா் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கல்வி பயிற்றுவிப்பாளா் உடற்தகுதி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அக்டோபா் 3-ஆம் தேதி காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.  எனவே, இத் தோ்வில் கலந்துக் கொள்ள விருப்ப முடைய மனுதாரா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட காவலா், சிறைக் காவலா், தீயணைப் பாளா் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பணியிடங் களுக்கும் உடற்தகுதி தோ்வு, சேலம் காந்தி விளை யாட்டு மைதானத்தில்அக்டோபா் 3-ஆம் தேதி காலை  7 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, தோ்ச்சி  பெற்ற மனுதாரா்கள் கலந்து கொண்டு பயன்பெற லாம் என்று தெரிவித்துள்ளார்.

போட்டித் தோ்வுக்கு ஆயத்த பயிற்சி:  மீனவ சமுதாய இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி, அக்.1- போட்டித் தோ்வுக்கான ஆயத்தப் பயிற்சியில் சேர மீனவ சமுதாய இளை ஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரி வித்துள்ளார். இது குறித்து, தருமபுரி மாவட்ட  ஆட்சியா் திங்களன்று வெளியிட்ட  செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டு தோறும் மீனவக் கூட்டுறவு சங்கக் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதா யத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளை ஞா்களை தோ்ந்தெடுத்து தனிக்குழு வாக அமைத்து அவா்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் கலந்துக் கொள்ள ஏதுவாகப் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும்  மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகள் இப்பயிற்சி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர், விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை இயக்குநா் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவ லகங்களில் அலுவலக வேலை நாள் களில் நேரில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரா் மீன் துறை இணையதளத்தில் உள்ள விரி வான அரசு வழிகாட்டு நெறிமுறை களின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன் துறை உதவி இயக்குநா் அலுவல கத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற அக். 23ஆம் தேதி  மாலை 5 மணிக் குள் விண்ணப்பிக்க வேண்டும்.  கூடுதல் விவரங்களுக்கு, மீன்வள உதவி இயக்குநா் அலுவலகம், ராம சாமி தெரு, ஒட்டப்பட்டி, மாவட்ட  ஆட்சியா் அலுவலகம் அஞ்சல், தருமபுரி. தொலைபேசி எண்:  04342-232311 என்கிற முகவரியிலோ அல்லது நேரிலோ தொடா்பு கொண்டு  பயன்பெறலாம் என தெரிவித் துள்ளார். 

தண்டவாள பராமரிப்பு பணி  சிறப்பு ரயில்கள் ரத்து

 சேலம், அக்.1- தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கரூர் பயணிகள் சிறப்பு ரயில், திருச்சி-கரூர் பயணிகள் ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள், வரும்  அக்.4ஆம் தேதி வரை ரத்து செய் யப்பட்டுள்ளது.  திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட குளித்தலை -பேட்டவாய்த்தலை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி  நடக்கிறது. இதனால், அக்டோபர் 1ஆம் தேதி முதல்  4ஆம் தேதி வரை 4 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதன்படி, திருச்சி-கரூர் பயணிகள் ரயில் (76833), கரூர்-சேலம் பயணிகள் சிறப்பு ரயில் (06833), சேலம்-கரூர் பயணிகள் சிறப்பு ரயில் (06834), கரூர்-திருச்சி பயணிகள் சிறப்பு (76834) ஆகிய 4 ரயில்கள் 4ஆம் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (56109) 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை 40 நிமிடங்கள் பேட்டவாய்த்தலையில் நிறுத்தி  தாமதமாக இயக்கப்படும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.