கோவை, ஜூலை 18- கோவையில் சனியன்று ஒரு வயதுக் குழந்தை உட்பட 117 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. செவ்வாயன்று 188 பேர், புதனன்று 104, வியாழனன்று 44, வெள்ளியன்று 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலை யில், சனியன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் செல்வ புரத்தில் 12 பேரும், கே.கே புதூரில் 5 பேரும், சார மேட்டில் 4 பேரும், கோவைப்புதூரில் 5 பேர் என 66 ஆண்க ளும், 55 பெண்களும் அடங்குவர். மேலும் இதில் 1 வயதுக் குழந்தை முதல் 6 வயதுக் குழந்தை வரை 6 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.