திருப்பூர், மார்ச் 18- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட பொதுசுகாதாரத்தறையின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள், அவை பரவும் விதம் மற்றும் கொரோனா நோய் தடுப்பு வழிமுறை கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக பேருந்து நிலையம், ரயில் நிலை யம், வழிபாட்டுத்தளங்கள், திரையரங்குகள், வணிகவளா கங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தினமும் 1 லிட்டர் கிருமி நாசினியுடன் (லைசால்) 19 லிட்டர் தண்ணீரை கலந்து தெளிக்கப்படவேண்டும். மேலும், மாவட்டத்தி லுள்ள அனைத்து மருத்துவமணைகளிலும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்திட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, அர சுத்துறை மற்றும்தனியார்த்துறைகளில் 1 லிட்டர் ஹைட்ரோ குளோபின் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண் டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகு மார், மாநகர காவல் துணை ஆணையர் பத்ரி நாரயணன், மகளிர்த் திட்ட இயக்குநர் கோமகன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், மாநகராட்சி ஆணை யாளர் க.சிவகுமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண் டனர்.