மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டத்தின் முன் னாள் செயலாளர் தோழர் டி.பி. முத்துசாமியின் 30ஆவது நினைவு தினத்தையொட்டி ஈரோடு, மூலப்பாளையம் டிபிஎம் நினைவு கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு அவரின் படத் திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் தலைமை வகித்தார். கொடியை மாவட்ட குழு உறுப்பினர் லலிதா ஏற்றினார். விஜயராகவன் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து, ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சி முத்து மற்றும் இடை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.