கோவை, நவ.11- கோவையில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.51 டாக்டர்.ராஜேந்திரபிரசாத் சாலையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் கட்டிட அனுமதி விதிகளுக்கு மாறுதலாகவும், கூடு தலாகவும் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி களுக்கு புகார் வந்தது. அதாவது, மூன்றாம் தளத்தில் குடி யிருப்பு மற்றும் கடை கட்ட அனுமதி பெறப்பட்ட நிலை யில், அவ்விடத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்துள் ளது. அதேபோல், வாகன நிறுத்த அனுமதி பெறப்பட்ட இடத்தில் வணிக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்டிட விதி பாதிப்புகளை சரிசெய்யு மாறு மாநகராட்சியின் சார்பில் கடந்த செப்.28 ஆம் தேதி யன்று அறிவிப்பு வழங்கப்பட்டு 30 நாட்கள் கால அவ காசம் வழங்கப்பட்டது. இருந்தும், கட்டிட உரிமையாளர் அதை சரிசெய்யவில்லை. அதன் பிறகு மீண்டும் 3 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. அவ்வறிவிப்புக்கும் எவ் வித சீரமைப்பும் செய்யவில்லை. இந்நிலையில், நவ.5 ஆம் தேதியன்று 24 மணி நேரத்திற்குள் கட்டிடத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு இறுதி அறிவிப்பும் வழங்கப் பட்டது. போதிய கால அவகாசம் வழங்கியும் கட்டிட உரிமை யாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கததால், மேற்படி தனி யார் குடியிருப்பு மற்றும் வணிக உபயோக கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.