tamilnadu

img

உதகையில் மீட்பு பணிகளுக்கு சென்ற கோவை மாநகராட்சி பணியாளர்கள்

கோவை, ஆக.12- உதகையில் நிவாரண மீட்புப் பணிகளை மேற் கொள்ள கோவை மாநகராட்சியைச் சேர்ந்த சுகாதாரப் பணி யாளர்கள் சென்றனர்.  கோவை மாநகராட்சியின் சார்பில் உதகையின் கன மழை நீடித்து வரும் காரணமாக நிவாரண மீட்புப்பணி களை மேற்கொள்ளவும், மக்களுக்கு உதவி செய்வதற்கு  ஏதுவாகவும் 60 சுகாதாரப் பணியாளர்களையும், மாநக ராட்சியைச் சேர்ந்த 2 சாக்கடை அடைப்பு எடுக்கும் லாரிகளும் உதகைக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலிருந்து பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திஷ்ரவன்குமார் ஜடாவத் வழியனுப்பி வைத்தார்.