tamilnadu

img

பொள்ளாச்சி போக்குவரத்து கழக மேலாளரை கண்டித்து

கோவை, ஜூலை 11- போக்குவரத்துக் கழக ஊழியர் நலனுக்கு விரோத மாகச் செயல்படும் பொள் ளாச்சி கிளை (1) மேலாளரை கண்டித்து  சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங் கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி யில் வியாழனன்று நடைபெற்றது. பேருந்து போஸ்டிங்கை வியாபாரமாக் குவது, முறைகேட்டை தடுக்க உயர் அதி காரிகள் தலையிட்டாலும் அதனை கிளை மேலாளர் மறுப்பது, விடுப்பை மறுத்து ஆப்சென்ட் போட்டு தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படுவது உள்ளிட்ட பொள்ளாச்சி கிளை  1 மேலாளரின் தொழி லாளர் விரோத நடவடிக்கையைக் கண் டித்து வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  சிஐடியு கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசு போக்கு வரத்து கழக பொள்ளாச்சி கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மோகன் ராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட் டத்தில் சங்கத்தின்தலைவர் பரமசிவம், பொது செயலாளர் வேளாங்கன்னி ராஜ் மற்றும் ஆர்.சேதுராமன், பழனிச்சாமி, நாக ராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர்.முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் சீனியாரிட்டி டூட்டியை முறையாக நடைமுறைப்படுத்து, கழக வருவாயை சூறையாடாதே, எதற்கெடுத் தாலும் குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுத்து தொழிலாளர்களை பழிவாங் காதே உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி னர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.