tamilnadu

img

மரத்தில் கார் மோதி விபத்து: 4 இளைஞர்கள் பலி

கோவை, ஆக. 7 -   கோவையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்திரேஷ் (22). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இந்தி ரேசின் நண்பர் வெங்கடேஷ் என்பவரின் பிறந்தநாள் விழா கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது. இதற்கு தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் சென்றுள் ளார்.

நிகழ்ச்சி முடிந்து அதிகாலையில் ஆனைக்கட்டி சாலை வழியாக திரும்பி வந்துள்ளனர். அப்போது இந்திரேஷ் அதி வேகமாக கார் ஒட்டி வந்த நிலையில், காளையனூர் பகுதி யில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் இந்திரேஷ், பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜூ, கஸ்தூரா நாயக்கன்பாளையம் பகு தியைச் சேர்ந்த மோகன் ஹரி, வட கோவையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய 4 பேரும் சம்பவயிடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த வடகோவையைச் சேர்ந்த பிரஜேஷ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தடாகம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.