பொள்ளாச்சி, மே 14-பொள்ளாச்சி உடுமலை சாலையில்உள்ள ஒரு உணவு விடுதி அருகே சாலையைஆக்கிரமித்து நிறுத்தப்படும் பேருந்துகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குஆளாகி வருகின்றனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உயர்தர சைவ உணவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு உணவருந்த அரசு போக்குவரத்துக் கழகபேருந்துகள் வருகின்றன. பயணிகள் இறக்கி விடும் பேருந்துகள் சாலையின் குறுக்கே நிறுத்தப்படுவதால் பொள்ளாச்சி - உடுமலை சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது குறித்து போக்குவரத்துகாவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.