tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் மூன்றாம் நாளாக உண்ணாவிரதம்

ஈரோடு, ஜூலை 4-  சம்பளம் வழங்கக் கோரி பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் மூன்றாம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து கடந்த மூன்று நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஈரோட்டில் வியாழனன்று நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி ஆர்.தம்பிக்கலையான், தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி  எம்.சையது இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் என்.குப்புசாமி உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் எஸ்.சுப்பிர மணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத் தின் மாநில உதவி செயலாளர் எல்.பர மேஸ்வரன், மாநில அமைப்பு செயலா ளர் சி.பரமசிவம்,  திருப்பூர் மாவட்ட நிர்வாகி சின்னசாமி, பிஎஸ்என்எல்  ஊழியர் சங்கத்தின் மாநில உதவிச் செயலர் வி.மணியன், மாவட்ட செய லாளர் சி.மணி, ஒப்பந்த தொழிலா ளர்கள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவை

கோவை தலைமை தொலைபேசி நிலைய வளாகத்தில் செவ்வாயன்று துவங்கிய மூன்று நாள் தொடர் உண்ணாவிரதம் வியாழனன்று நிறை வடைந்தது. சங்கத்தின் தலைவர்கள் ஏ.முகமதுஜாபர், எம்.பி.வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற் றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தினை சகோதர சங்க தலைவர்கள் வாழ்த்தி பேசினர். நிறைவு நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் துள சிதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிறைவாக பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில செய லாளர் சி.வினோத்குமார் நிறைவுரை யாற்றினார். முன்னதாக மூன்று நாள் போராட்டத்திலும் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசு மற்றும் பிஎஸ்என்எல் நிறுவ னத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், கோரிக் கைகளை வலியுறுத்தியும் முழக்கங் களை எழுப்பினர். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல்இயு மாவட்ட பொருளாளர் பி.தங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ராஜன் முன்னிலை வகித்தார். பிஎஸ்என்எல்இயு மாநில உதவித் தலைவர் எஸ்.தமிழ்மணி, மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ஹரிஹரன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.செல்வம், மாநில உதவிச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ராமசாமி, திருச்செங்கோடு கிளைத் தலைவர் எம்.ராஜலிங்கம், செயலர் பி.ஆண்டி யப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற உண் ணாவிரதத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பருதி வேல் தலைமை வகித்தார். பிஎஸ்என் எல்இயூ மாநில உதவி செயலாளர் எம்.பாபு, மாவட்டசெயலாளர் பி.கிருஷ்ணன்,  மாவட்ட அமைப்பு செயலாளர்கள் என்.வரதராஜன், வி.எஸ்.சந்திரன், மாவட்ட உதவி செயலாளர் சி.குஞ்சு, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பி.ஸ்ரீ்ரீதரன், மாவட்ட செயலாளர் எம்.செளந்தரராஜன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.