திருப்பூர், ஆக. 16 - திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வெள்ளியன்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து மார்பகப் புற்று நோய் துறை மருத்துவர் அன்புச்செல்வன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உலகிலேயே இந்தியா வில்தான் அதிகமானோர் மார்பகப் புற்றுநோய் பாதிப் புக்கு ஆளாகின்றனர். 10 நிமிடத்திற்கு இருவர் பாதிக் கப்படுவதாகவும், 22 பேரில் ஒருவர் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.