tamilnadu

img

புத்தக வாசிப்பு என் வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக மாற்றியது கோவை புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

கோவை, ஜூலை 20- புத்தக வாசிப்பு என் வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக மாற்றியதாக கோவை புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கோவை கொடீசியா தொழில் முனைவோர் கூட்டமைப்பும், பப்பாசி  பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை சனியன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடங்கி வைத்தார். அப்போது, இன்றைய இளைய தலைமுறையினரின் மத்தி யில் உள்ள பகைமை, ஏற்றத் தாழ்வு கள் கவலை கொள்ளச் செய்கிறது. அவர்களை ஆக்கப்பூர்வமாக மாற்றப் புத்தகத் திருவிழாக்கள் அவசியமா கின்றது. பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே வாசிப்புக் பழக்கத்தை அனைத்து ஆசிரியர்களும் ஊக்கு விக்க வேண்டும். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையா ளர்கள் அனைவரும் சமூக முன்னேற் றத்திற்காகவும், அக்கறையுடன் செயல்படுபவர்கள். அவர்களை நாம் போற்ற வேண்டும். என் இளமைக் காலத்தில் வாசிப்புப் பழக்கத்தினை என் தந்தை ஊக்குவித்தார். காந்தி யம், மார்க்சியம், ஆன்மீகம் என அனைத்துத் தலைப்புகளிலும் புத்த கங்களைப் படிக்க ஊக்குவித்தார். அது என் வாழ்க்கையை ஆக்கப் பூர்வமாக மாற்றியது. கோவை புத்தக திருவிழாவில் தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. தொழிலகம் தோறும் நூலகம் மூலமாக தொழி லாளர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதும் வரவேற்புக்குரியது என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.  இக்கண்காட்சியில் தமிழ், மலை யாளம், ஆங்கிலம், இந்தி என பல மொழிகளை சார்ந்த புத்தகங்கள் இடம்பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல  மாநிலங்களில் இருந்து பதிப்பாளர் கள் இந்த புத்தகத் திருவிழாவில் பங் கேற்றுள்ளனர். இலக்கிய நிகழ்வுகள், பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் பத்து நாட்களும் நடைபெறவுள்ளன. பதிப்பு உலகில் சாதனை படைத்து வரும் பாரதி புத்தகலாயத்தின் புத்தக அரங்கு 45,46 அரங்கிலும், குழந்தை களுக்கான அரங்கான புக்ஸ் ஆப் சில்ரன் அரங்கம் 71,72 ஆகிய அரங்கி லும் இடம்பெற்றுள்ளது. கோவை புத்தக திருவிழாவில் 150 பதிப்பகங் கள், 250 விற்பனையகங்கள் பங் கெடுத்துள்ளன. பீளமேட்டை அடுத்த கொடீசியா அரங்கில் இந்தக் கண் காட்சி வரும் 28-ம் தேதி வரை  நடைபெறுகிறது. அவினாசி சாலை யில் இருந்து கொடீசியா வரை வந்து செல்ல இலவச வாகன வசதி செய்யப் பட்டுள்ளது.