tamilnadu

img

சேவூரில் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

அவினாசி, மே 26- சேவூரில் ஆட்டோ மற்றும்நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை மூலம் ஞாயிறன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அவிநாசி அருகே சேவூரில் கைகாட்டி ரவுண்டானா மற்றும் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் என இரண்டு இடங்களில், பயணிகள் ஆட்டோ, வாடகை கார், மூன்று மற்றும் நான்கு சக்கர சரக்கு ஆட்டோ, டூரிஸ்ட் வேன் உள்பட 150க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாடகைக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் ஆட்டோக்கள் ஆட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு வேகமாகச்செல்வதால் விபத்து அதிகமாக நடக்கின்றன. மேலும், ஓட்டுனர்உரிமம் இல்லாமல் ஆட்டோவை இயக்குவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து சேவூரில் தனியார்திருமண மண்டபத்தில் அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்குகாவல் ஆய்வாளர் சம்பங்கி தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர்கள் ஜெகநாதன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஆய்வாளர் சம்பங்கி பேசியதாவது,  அனைத்து வாகன ஓட்டுனர்களும் கட்டாயம் சீருடை அணிந்திருக்கவேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடாது. அதே போல் பயணிகள் ஆட்டோவில் ஓட்டுனர் சீட்டில் ஓட்டுனரின் நண்பர்கள் என இரு புறமும் இருவர் அமர்ந்து கொண்டு பயணிகள் ஆட்டோவை இயக்குவதாக எங்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிகமாக சேவூர் பகுதியில் ஆட்டோவிபத்து ஏற்படுகிறது. இனிமேல் ஓட்டுனர் சீட்டில் ஓட்டுனர் மட்டுமே அமர்ந்து பயணிகள் ஆட்டோவைஇயக்க வேண்டும். மேலும் பயணிகள்ஆட்டோவில் மூன்று நபர்கள் மட்டுமேஅழைத்து செல்ல வேண்டும். அதிக ஆட்களை ஏற்றிச் சென்றால்அபராதம் விதிக்கப்படும். மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.