சேலம், நவ. 4- தில்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்க ணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தில்லியில் வழக்கறிஞர்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கிய காவல்துறையினர் மீது தில்லி அர சும், மத்திய அரசும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று ஒரு நாள் நீதிமன்ற பணிப்புறக்கணிப் பில் ஈடுபடுவது என தமிழ்நாடு மற் றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதன்ஒருபகுதியாக, சேலத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், சேலம் நீதிமன்ற வளா கத்திற்கு முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பொன்.ரமணி, இமயவரம்பன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.