tamilnadu

img

கறுப்பு பணம் மாற்றிய வழக்கு: சிவசங்கரின் ஜாமீன் மனு நிராகரிப்பு...

கொச்சி:
கறுப்பு பணம் கையாண்டது குறித்து அமலாக்க இயக்குநரகம் (இ.டி) பதிவு செய்த வழக்கில் எம்.சிவசங்கரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இருதரப்பினரின் வாதங்கள், ஆட்சேபனை குறிப்பு மற்றும்இடியின் பதில் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன்விண்ணப்பத்தை நிராகரித்தது.

அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகளால் எம்.சிவசங்கரன் கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த வியாழக்கிழமை வரை அவர் இடியின் காவலில் இருந்தார். சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், வழக்கு முறியடிக்கப்படலாம், மேலும் அவர் தலைமறைவாகலாம் என்றும்நீதிமன்றத்தில் அவரது ஜாமீன்மனு மீது  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை ஜாமீன் மனு பரிசீலிக்கப்பட்டபோது விசாரணை சுமார் ஐந்து மணிநேரம் நீடித்தது. நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி விவாதங்களும் ஏற்பட்டன.

;