tamilnadu

img

திருக்காகரா நகராட்சி மீண்டும் எல்டிஎப் வசம்

கொச்சி, நவ.6- கொச்சி மாநகராட்சியை ஒட்டியுள்ள திருக்காகரா நகராட்சி மீண்டும் எல்டிஎப் வசம் வந்துள்ளது. நகர்மன்ற தலைவராக எல்டிஎப்பின் உஷா பிரவீன் தேர்வு செய்யப் பட்டார். 43 உறுப்பினர்களை கொண்ட நகர் மன்றத்தில் எல்டிஎப், யுடிஎப்புக்கு தலா 21 உறுப்பினர்கள் உள்ளனர். நகர்மன்ற தலைவராக இருந்த ஷீலா சாருவை மாநில தேர்தல் ஆணையர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இந்நிலையில் புதனன்று நடந்த தலைவருக்கான  தேர்தலில் எல்டிஎப் வேட்பாளர் உஷா பிரவீன் 21 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். யுடிஎப் வேட்பாளர் அஜிதா தங்கப்பனுக்கு 20 ஓட்டுகள் கிடைத்தன. யுடிஎப் உறுப்பினர் வி.எம்.மஜீத்தின் ஓட்டு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. திருக்காகரா நகர்மன்றம் பட்டியலின பெண்ணுக்கு என இந்த ஒதுக்கப்பட்டதாகும்.   2015 உள்ளாட்சிக்கான பொதுத் தேர்தலில் 43 உறுப்பினர்களில் யுடிஎப் 21, எல்டிஎப் 20, இரு முன்னணி களின் அதிருப்தியாளர்கள் தலா ஒருவர் என வெற்றி பெற்றனர். அதிருப்தியா ளர்கள் ஆதரவுடன் எல்டி எப்பின் கே.கே.நீனு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் யுடிஎப் அதிருப்தியாளர் அந்த முன்னணியில் ஐக்கியமானார். நம்பிக்கை வாக்கெடுப் பில் யுடிஎப் வெற்றி பெற்றது. யுடிஎப்பின் எம்.டி.ஓமனா தலைவரானார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பி னர் ஷீலா சாரு முன்னணியிலிருந்து வெளியேறி எல்டிஎப் ஆதரவுடன் நகர்மன்ற தலைவர் ஆனார். இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சி தாவல் தடை சட்டத்தின் படி ஷீலா சாருவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. அதை தொடர்ந்து தற்போது தேர்தல் நடைபெற்றது. ஷீலா சாரு வாக்க ளிக்கும் தகுதி இல்லாத உறுப்பினராக தொடர்கிறார்.