tamilnadu

img

நிலைமை மோசமடைகிறது குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தேவை கேரள முதல்வர் எச்சரிக்கை

திருவனந்தபுரம், மே 21- கேரளத்தில் புதிய ஹாட் ஸ்பாட் இல்லை. ஆனால் சூழ்நிலைகள் மோசமடைந்து கொண்டிருக்கின்றன. அடுத்து வரும் நாட்க ளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கட்டுப்பாடு கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.     செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மேலும் கூறியதாவது: விமான சேவை மே 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. புள்ளிவிவரங்களின்படி, மே 1, 3, 4, 6, 7 ஆகிய தேதிகளில் புதிய கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட வில்லை. 8ஆம் தேதி ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. அன்று மொத்தம் சிகிச் சையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 16  மட்டுமாக இருந்தது.

மே 13இல் புதிய நோயா ளிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. 14 ஆம் தேதி 26 புதிய நோயாளிகள், 15 ஆம் தேதி 16, 16 ஆம் தேதி 11, 17 ஆம் தேதி 14, 18 ஆம் தேதி 29, செவ்வாயன்று 12, புத னன்று 25 என நோய் தொற்று ஏற்பட்டுள் ளது. 16 பேர் மட்டும் சிகிச்சையில் இருந்த நிலை மாறி தற்போது சிகிச்சை பெறுவோ ர் எண் ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் கூறினார்.  வெளிநாடுகளில் இருந்து வரும் அனை வரும் நோயாளிகளோ, விலக்கி வைக்க வேண்டியவர்களோ அல்ல. சிலர் நடத்தும் பொய் பிரச்சாரத்தில் யாரும் சிக்கிவிட வேண்டாம். வெளிநாடுவாழ் கேரளியருக் கும் சொந்தமானது இந்த மண். அவர் களுக்கு எந்த வாசலும் மூடப்படாது.

நோய் வருவது யாருடைய குற்றத்தினாலும் அல்ல. புதிதாக நோய் ஏற்பட்டது வெளியிலிருந்து வந்தவர்களிடமிருந்து என்று கூறியதை சிலர் தவறாக சித்தரிக்கிறார்கள். நோய் எங்கி ருந்து வருகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம். இங்கே நம் சகோதரர்கள் தங்களுக்குச் சொந்தமான மண்ணுக்கு வருகிறார்கள். நாம் அவர் களைப் பாதுகாத்து இங்குள்ளவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.  மாநிலத்தின் எல்லையில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வந்தால் கோவிட் அதிக பாதிப்புள்ள சிவப்பு மண்டலத்திலி ருந்து வரும் அனைவரிடமும் இயல்பாக பழகி ஆபத்துக்கு உள்ளாக நேரிடும். அத னால்தான் வாளயார் உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலைபாடு மேற்கொண்டது.

இதற்கு வேறுவிதமான பொருள் கற்பிக்க வேண்டியதில்லை. அப்படி கற்பிக்க முயற் சிப்போருக்கு சில நோக்கங்கள் இருக்க லாம். வருகிறவர்களில் பெரும்பாலானவர் கள் நோய் தொற்று இல்லாதவர்கள். சில ருக்கு நோய் தொற்று உள்ளது தெளிவாகி உள்ளது. வரும்போதே நோய் தொற்று உள்ளவர்களை அடையாளம் காண முடி யாது. கூட்டமாக வருவோரில் நோயாளிகள் இருக்கக் கூடும். அத்தகைய சூழ்நிலையில் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். அது அவர்களது பாதுகாப்புக்கும் இங்கு உள்ளவர்களின் பாதுகாப்புக்கும் அவசியம் என முதல்வர் கூறினார்.

புதனன்று கேரளத்தில் மேலும் 24 பேருக்கு கோவிட் உறுதியானது. இதில் 12 பேர் வெளிநாடுகளிலிருந்த வந்தவர்கள். 8 பேர் மகாராஷ்டிரத்திலிருந்தும் 3 பேர் தமிழ்நாட்டிலிருந்தும் வந்தவர்கள். கண்ணூ ரில் ஒருவருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டது. சிகிச்சையில் இருந்த 5 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். நாம் மிகமோசமான நிலைக்குச் சென்று கொண்டி ருக்கிறோம். ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், தொடர்ந்து வரும் நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளை பிரித்து சில இடங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு கள் தேவைப்படும்.

வெளிநாடுகளில் இருந் தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் அதிகமா னோர் வரத்தொடங்கியதைத் தொடர்ந்து இங்கே நோயாளிகளின் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்து வருகிறது.  எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ தேர்வுகள் ஏற்க னவே முடிவு செய்யப்பட்ட அடிப்படையில் மே 26 முதல் 30 வரை நடத்தப்படும். அனைத்து மாணவ மாணவியரும் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தப்படும். கோவிட் தடுப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளுடன் தேர்வு நடக்கும். தேவையனா போக்குவரத்து வசதி செய்யப்படும். ஏதேனும் பிரச்சனைகள் கவ னத்துக்கு வந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப் படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.