tamilnadu

img

கேரள சட்ட சபையில் ஆளுநருக்கு எதிராக போராட்டம்

கேரள மாநில சட்ட சபையில் ஆளுநருக்கு எதிராக சட்ட மன்ற உறுப்பினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
நாடாளுமன்றத்தில் மோடி அரசு எதேச்சதிகார போக்குடன் நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் மாணவர்கள் என பலகட்ட போராட்டங்கள் நடந்தி வருகின்றனர்.  இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் ,  ராஜஸ்தான்,  மேற்கு வங்கம் ஆகிய   மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டார். 
இந்நிலையில், கேரள சட்டப்பேரவை இன்று தொடங்கியது. அப்போது ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. பேரவையில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்த எதிர்ப்பு தெரிவித்து எம்எம்ஏ-க்கள் தடுத்து நிறுத்தியதால், அவை  காவலர்கள் பாதுகாப்புடன் முதல்வர் பினராயி விஜயன் ஆளுநரை அழைத்து சென்றார்.கடும் எதிர்ப்புக்கிடையே உரை நிகழ்த்தி வருகிறார்.
ஆளுநர் ஆரிப் முகமது கான் சபையில் பேசும்போது கூறியதாவது:-
மரபுப்படி ஆளுநர் தான் ஒரு மாநிலத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பார். அரசுக்கு அறிவுரை கூறவும் எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு. அதை மோதல் போக்காக யாரும் எடுத்துக் கொள்ள கூடாது. ஜனாதிபதிதான் என்னை நியமித்தார். என்னை திரும்ப பெறக் கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். அது சட்டப்படி செல்லுமா என்பதை அவர்கள்தான் முடிவு  செய்யவேண்டும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு என கூறினார்.

;