திருவனந்தபுரம், ஆக.17- மீண்டும் மீண்டும் இயற்கை ஏற்படுத்தி வரும் துயரங்களை எதிர்கொண்டு முன்னேற கேரள மக்களுக்கு உதவுவது நிவாரண நிதி. பெருவெள்ளத்தில் மூழ்கிய கேர ளத்தை உயிர்த்து எழச்செய்வது முதல்வரின் நிவாரண நிதிக்கு வந்து குவியும் உதவி களாகும். சிறிய பெரிய என பாகுபாடில்லா மல் வழங்கப்படும் உதவிகளின் நன்மை பயனாளிகளுக்கு சென்றடைவதை கேரள அரசு உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்ட போது முதல்வர் வேண்டுகோள் விடுத்த ‘சேலரி சேலஞ்ச்’ மூலம் நிவாரண நிதியாக ரூ.1205.18 கோடி வந்துள்ளது. தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை யாக ரூ. 2,675.71 கோடியும் திருவிழா நன்கொடைகள் மூலம் ரூ.117.69 கோடியும் மதுபானத்தின் மீதான வரி மூலம் ரூ.308.68 கோடியும் கிடைத்துள்ளது. பெருவெள்ள பாதிப்புகளுக்கான உட னடி உதவியாக 7,37,475 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வரையிலான தொகையாக ரூ.457.23 வழங்கப்பட்டது. பழுதான வீடு கள் கட்டடங்களை புனரமைக்க ரூ.1318.61 கோடி வழங்கப்பட்டது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். இதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப் பட்டன. 6,93,287 வீடுகள் வசிக்கத்தக்கதாக மாற்றப்பட்டன. 3 லட்சம் கிணறுகள் உட்பட பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்பட்டன. மூன்று நாட்க ளில் மூழ்கிய வீடுகளிலிருந்து 14,657 இறந்த கால்நடைகளின் உடல்கள் மீட்டு புதைக் கப்பட்டன. ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் அகற்றப்பட்டன. பெருவெள்ளத்தை தொடர்ந்து ஏற்பட்டிருக்க வேண்டிய தொற்று நோய்கள் தடுக்கப்பட்டன. 25 லட்சம் மின் இணைப்புகள் மிகவும் பாதுகாப்பாக வழங்கப்பட்டன.