கேரளாவில் கெரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 170க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் எர்ணாகுளத்தில் கொரேனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மதிக்கத்தக்க நபர் இன்று காலை 8 மணியளவில் உயிரிழந்துள்ளார். இது கேரளாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.