காசர்கோடு, ஜூலை 22- கேரளத்தில் புதனன்று ஒரே நாளில் நான்கு பேர் கோவிட்டால் உயிரி ழந்தனர். காசர்கோடு விளக் கோட்டூர் சதானந்தன், பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு கோவிட் பாதிப்புக் குள்ளான அவர் புதனன்று காலை மரணமடைந்தார். காசர்கோடு அணங்கூரைச் சேர்ந்த கைருண்ணிசா (48). கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த கோயா, கருநாகப்பள்ளி குலசேகரபுரத்தைச் சேர்ந்த ரஹியா (55) ஆகியோர் புதனன்று உயிரிழந்தனர். இதோடு கேரளத்தில் கோவிட்டுக்கு உயிரி ழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.