tamilnadu

கேரளத்தில் 240 பாதிப்பு வெளியில் இருந்து வந்தோர் 204; குணமடைந்தது 209 பேர்

திருவனந்தபுரம், ஜுலை 5- கேரளத்தில் சனியன்று புதிய உச்ச மாக 240 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 152 பேர் வெளி நாடுகளில் இருந்தும் 52 பேர் இதர  மாநி லங்களில்  இருந்தும் கேரளத்துக்கு வந்த வர்கள். தொடர்புகள் மூலம் 17பேருக்கு மட் டுமே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை சனியன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நோய்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த வர்களில் 209 பேர் சனியன்று குணமடைந்த னர். இதுவரை 3048 பேர் குணடைந்துள் ளனர். தற்போது 2129 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 1,77,759 பேர் கண்கா ணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,74,844 பேர் வீடுகள்-நிறுவன கண்காணிப்பிலும் 2915 பேர் மருத்துவமனைகளிலும் கண்கா ணிப்பில் உள்ளனர். சனியன்று 367 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். சனியன்று காலை வரை 24 மணி நேரத் தில் 7219 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 2,60,011 நபர் களின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக் கப்பட்டன. அதில் 5092 மாதிரிகளின் முடிவு கள் வரவேண்டும்.  மேலும், சமூக தொடர்பு அதிகம் உள்ள சுகாதார ஊழியர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், பொதுநல ஊழி யர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினிரின் 56,226 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 53,692 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியாகின. சனியன்று மேலும் 13 கட்டுப்பாட்டு பகுதி கள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டன. தற்போது கேரளம் முழுவதுமாக 135 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.