tamilnadu

img

கேரளத்தில் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்கள் கோவிட் பரிசோதனையில் நோய் தொற்று இல்லை

திருவனந்தபுரம், ஜுன் 15- கோவிட் நோய் பரவல் காரணமாக ஒத்தி  வைக்கப்பட்ட 10, 12 ஆம் வகுப்பு தேர்வு களை மிகுந்த எச்சரிக்கையுடன் மே 26  முதல் 30 வரை 13 லட்சம் கேரள மாணவ மாணவிகள் எழுதினர். அதன்பிறகு அவர்க ளிடம் நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனை யில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் நீண்டகாலம் நம்முடன் நீடிக்கும் என்று கருதப்படும் கோவிட் வைரசுக்காக எதையும் ஒத்தி வைப்பதல்ல அனைத்தும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்பதே கேரள மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு களின் முதல் முடிவு. ஏராளமான நுழைவுத்  தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் எச்சரிக்கையுடன் தேர்வு களை நடத்த அரசு மேற்கொண்ட முடிவு சரி யானது என்பதை இது தெளிவுபடுத்தி யுள்ளது. தனிநபர் இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி போன்றவற்றை பயன்ப டுத்தி கோவிட் தொற்றாமல் தடுக்க முடியும் என்பதையும் இதன்மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ளது கேரளம்.  மாணவர்களே முககவசங்கள் தயாரித்து வீடுகளில் வழங்கினர். தேர்வு அறையில் தனி மனித இடைவெளி பின்பற்றப்பட்டது. அனைத்து ஆசிரியர்களுக்கும் கையுறை, தேர்வு அறைக்குள் நுழையும்போதும் வெளி யேறும்போதும் சானிடைசர் பயன்படுத்தி சுத்தப்படுத்தல், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரி சோதனை, தீயணைப்பு படையும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் இணைந்து வகுப்ப றைகள் முழுவதும் கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்தல், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகே விடைத்தாள் சரிபார்ப்பு, சிறப்பு வாக னங்களில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருதல்… என ஒன்றுபட்ட நடவ டிக்கைகள் மூலம் கேரளம் வெற்றிகரமாக தேர்வுகளை நடத்தியுள்ளது.

கே.கே.சைலஜா பாராட்டு
பள்ளித் தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப் பட்டது குறித்து பாராட்டு தெரிவித்த சுகா தாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், “தேர்வு முடிந்து 15 நாட்கள்  கடந்துவிட்ட நிலையில் ஒரு மாணவ ருக்குகூட நோய் அறிகுறி இல்லை என்பது  ஒன்றுபட்ட முன்னெச்சரிக்கையின் மாபெரும்  வெற்றியாகும். அனைவரும் இந்த முன்னெச் சரிக்கையை சுயமாக கடைப்பிடித்தால் நாட்டை விரைவாக நோயின் பிடியில் இருந்து  விடுவித்துவிடாலாம்” என குறிப்பிட்டார்.