திருவனந்தபுரம், ஆக.3- கேரளத்தில் ஞாயிறன்று 1169 புதிய கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்ட னர். இதில் 991 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டது. 56 பேருக்கு நோய் தொற்றிடம் தெரியாது. 688 பேர் குணமடைந்தனர். கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது: ஞாயிறன்று கோவிட் உறுதி செய்யப்பட்டதில் 43 பேர் வெளிநாடுக ளில் இருந்தும், 95 பேர் வெளிமாநிலங்க ளில் இருந்தும் வந்தவர்கள். 29 சுகாதா ரத்துறை ஊழியர்களுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஞாயி றன்று பாறசாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கோவிட்டுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆனது. தற்போது 11,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கோவிட்டிலி ருந்து 14,467 பேர் குணமடைந்தனர். பல் வேறு மாவட்டங்களில் 1,45,777 பேர் இப்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,35,173 பேர் வீடுகள்/ நிறுவனங்க ளிலும் 10,604 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். ஞாயி றன்று 1363 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஞாயிறன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,028 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னுரிமை பிரி வினர் உட்பட இதுவரை மொத்தம் 8,17,078 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப் பப்பட்டன. அதில் 5215 மாதிரிகளின் முடி வுகள் நிலுவையில் உள்ளன. சுகாதா ரத்துறையினர், பொதுநல ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 1,26,042 மாதிரி கள் ஆய்வு செய்யப்பட்டதில் 1541 முடி வுகள் நிலுவையில் உள்ளன. ஞாயிறன்று 30 கட்டுப்பாட்டு பகுதிகள் புதியதாக உரு வாகின. 25 பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன. தற்போது மொத்தம் 497 பகுதிகளில் கட்டுப்பாடுகள் உள்ளன.