புகைப்படங்களை கூகுளில் பேக்அப் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனி 15GB வரை மட்டுமே கூகுள் போட்டோஸில் இலவசமாக பேக் அப் எடுக்க முடியும் மேலும் தேவை என்றால் நம்முடைய தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2021 ஜூன் முதல் தான் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன் கூகுள் போட்டோஸில் ஸ்டோர் செய்யப்படும் போட்டோ, வீடியோக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு கூகுள் போட்டோஸில் 100GB ஸ்டோரேஜ் தேவை என்றால் மாதம் ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1300 செலுத்த வேண்டும். இதுபோன்று ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப போட்டோக்களை பேக்அப் வைக்க கட்டணங்களை நிர்ணயித்துள்ளது கூகுள்.
மேலும் இரண்டு வருடங்களுக்கு மேல் லாக்இன் செய்யப்படாமலேயே இருக்கும் கணக்குகளின் டேட்டாவை மொத்தமாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கூகுள் போட்டோஸில் 4 டிரில்லியன் போட்டோ, வீடியோக்கள் உள்ளனவாம். இந்நிலையில் இலவசமாக இந்த சேவை வழங்குவதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்த போட்டோக்களை சேமிக்கவே பெரும் தொகை செலவிட வேண்டி உள்ளதாம். அதனால் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.