சென்னை, மே 5- கோயம்பேடு சந்தை மூடப்பட்டதையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு சரக்கு கள் வரத்து நிறுத்தி வைக் கப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் காய்கறி தட்டுபாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள தொழி லாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் மூலம் பிற மாவட்டங்க ளுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை (மே 5) முதல் சந்தை மூடப்ப டுவதாக தமிழக அரசு அறி வித்தது. இதையடுத்து கோயம்பேடு சந்தையின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டன.
அரசின் முடிவு குறித்து கோயம்பேடு அனைத்து மொத்த வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (மே 5) நடைபெற்றது. இதன்பின்னர் கூட்ட மைப்பின் தலைவர் ராஜ சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காய்கறி மொத்த வியாபாரத்தை திரு மழிசை பகுதிக்கு மாற்றி னால் மொத்த வியாபாரி களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். திருமழிசை பகுதி யில் எந்த அடிப்படை வசதி யும் இல்லை. வியாபாரம் மூலம் கிடைக்கும் பணத்தை எடுத்து செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களும் செய்து கொடுக்கப்பட வில்லை என்றார்.
மேலும் திருமழிசை பகுதியில் மொத்த வியா பாரம் செய்வதற்கும், 1500க்கும் மேற்பட்ட லாரி களை நிறுத்தி வைப்ப தற்கான இடவசதிகள் இருக்கிறதா என்பதை வரும் 8ஆம் தேதி ஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார். எனவே, மே 10ஆம் தேதி வரை வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் சரக்கு கள் வரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாகவும், கோயம்பேடு மொத்த விற்பனை கடை களுக்கு விடுமுறை அளிப்ப தாகவும் தெரிவித்தார்.