கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் - பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கோவிந்தன் துவக்கிவைத்தார். கல்லூரி நிறுவனத் தலைவர் பொறியாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் குமார்,அறங்காவலர் மலர், ரெட் கிராஸ் செயலாளர் செந்தில்குமார், கல்லூரி இயக்குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்ரமணியன், மருத்துவர் பூபதி, யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் சையத் முகமது அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.