பிஎஸ்என்எல் தருமபுரி- கிருஷ்ணகிரி கோட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. பின்னர் ஓசூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒப்பந்த ஊழியர்கள் சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் நந்தன், பன்னீர், அனைத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்திரன், வரதராஜன், சம்பத், சீனிவாசன், ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் தங்கப்பாண்டியன், சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.