காஞ்சிபுரம் மாவட்டம், காக்கநல்லூர் கிராமத்தில் வசித்துவரும் 21 பழங்குடியின மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஎம் உத்திரமேரூர் வட்டக்குழு நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் வட்டாட்சியர் பயனாளிகளுக்கு குடிமனை பட்டாக்களை வழங்கினார். மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், பகுதிச் செயலாளர் வி. கே. பெருமாள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.