82 கிலோ கஞ்சா பறிமுதல்
காஞ்சிபுரம், ஜூன் 4- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொல்கத்தா மாநிலத்தில் இருந்து வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஓம் பிரகாஷ், நடத்துனர் குமார் ஆகியோர் ஆந்திர மாநிலம் வந்தடைந்தனர். ஆந்திர மாநிலத்தில் 82 கிலோ எடையுள்ள கஞ்சாவை கொள்முதல் செய்துள்ளனர். பிறகு அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக சுங்குவார் சத்திரம் பகுதிக்கு வந்து வீட்டு உபயோக பொருட்கள் உள்ள ஏஜென்சியின் குடோனில் டெலிவரி செய்து கொண்டிருந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். இதில்45 மூட்டைகளில் 82 கிலோகஞ்சா இருந்தது தெரியவந்தது. பிறகு காவல்துறையினர் இவற்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா எடுத்து வந்த ஓட்டுனர், நடத்துநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரங்குகள் அட்டகாசம்
பொன்னேரி, ஜூன் 4-பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம் பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட குரங்குகள் திடீரென கிராமத்துக்குள் புகுந்தன. குரங்குகள், வீட்டுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, பழங்களை எடுத்துக் கொண்டும் குழந்தைகள் கையில் உள்ள திண்பண்டங்களை பறித்துக் கொள்கின்றன. மேலும் குரங்கை விரட்டினால் அவர்கள் மீது கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.