உத்திரமேரூர், அக்.17- உத்திரமேரூர் அருகே வந்த வாசியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது பெருநகர் கிராமம். இக்கிரா மத்தின் ஏரியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற் காலத்தைச் சார்ந்த இறந்தவர்களை புதைக்கும் கல்திட்டை என்னும் ஈமச்சின்னம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவரும் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரு மான சு.பாலாஜி தலைமையில் ஜெயசீலன், கோகுல சூர்யா ஆகி யோர் பெரு நகர் கிராமத்தில் கள ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, அந்த ஊரின் பெரிய ஏரியில் கற்கால மனிதர்களின் ஈமச் சின்னங்களில் ஒரு வகையான கல்திட்டையை கண்டறிந்தனர். இந்த கல்திட்டை இறந்தவர்க ளுக்கான நினைவுச் சின்னங்க ளில் ஒருவகையாகும். இது பெருங்கற் காலத்தில் இந்தது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய கற்களை செங்குத்தாக வைத்து அதன் மீது ஒரு பெரிய தட்டையான கற்பலகை போன்ற கல்லைக் கொண்டு மூடிய நிலை யில் வைக்கப்பட்டிருக்கும் நினை வுச் சின்னமாகும். சுமார் ஆறரை அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த கல்திட்டை 4 பெருங்கற்களால் ஆனதாகும். மனித குல வளர்ச்சி யில் வேட்டை சமூகத்தில் பெருங்கற் காலத்தில் வாழ்ந்த மனித இனம் தனது வாழ்க்கை முறையில் வேட்டையின்போதோ அல்லது வயது மூப்பின் காரண மாகவோ, நோய்வாய்ப்பட்டோ இறக்க நேரிட்டால் நரி முதலிய காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருக்க அந்த உடலின்மீது பெரிய பெரிய கற்களை வைத்த னர். பின்பு தனது முன்னோர் இறந்த இடத்தை அடையாளப்ப டுத்தும் வகையில் இந்த கற் களை பயன்படுத்தி வந்துள்ள னர். எனவே, இதற்கு கல்திட்டை என்றும் பெயர் வைத்திருக்கி றார்கள். இதை தமிழ்நாடு தொல்லி யல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் மார்க்சியாவும் உறுதி செய்திருக்கிறார் என்றும் ஆய்வு மையத் தலைவர் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட இந்த பெருங்கற் காலத்தை சார்ந்த இந்த கற்திட்டை குறித்து சங்க இலக்கி யங்களில் அகநானூறு, புற நானூறு, ஐங்குறுநூறு முதலிய நூல்களில் இடம் பெற்றன. இது போன்ற கல்திட்டை உத்திரமேரூர் நகரில் காக்கநல்லூர் செல்லும் சாலையில் ஜம்போடை எனும் இடத்திலும் உள்ளது. இதை மத்திய தொல்லியல் துறை பாது காத்து வருகிறது. பெருநகரில் கிடைத்திருக்கும் இந்த கற்திட்டை யும் தொல்லியல்துறை பாது காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.