சங்கராபுரம், ஆக. 8- சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளி டம் கொள்முதல் செய்த விளை பொருட்களுக்கு உரிய பணத்தை தரா மல் மோசடி செய்ய முயன்ற 4 முக வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுமார் 4 லட்ச ரூபாய் முகவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.சங்கரா புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத் திற்கு அதனை சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவ சாயிகள் தங்களின் விளை பொருட் களை விற்பனைக்காக கொண்டு வரு கின்றனர். அப்படி கொண்டுவரும் தானி யங்களை கொள்முதல் செய்யும் சில வியாபாரிகள் அதற்கான பணத்தை உட னடியாக விவசாயிகளுக்கு தராமல் சில மாதங்களாக அலைக்கழித்து வந்த னர்.
இதனைக் கண்டித்தும், விவசாயி களுக்கு உடனடியாக பணத்தை கொடுக் காத முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பணம் பெற்றுத் தர வேண்டும் என கோரியும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலை வர் வி.ரகுராமன், செயலாளர் ஏ.வி.ஸ்டா லின்மணி, பொருளாளர் எம்.சி.ஆறு முகம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் விளைவாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பிரபு, சங்கராபுரம் காவல் நிலையத்தில் தானியங்களை வாங்கிய முகவர்கள் ராஜா, அசோக், கிருஷ் ணன், செந்தில்குமார் ஆகியோர் ரூபாய் 18 லட்சம் மோசடி செய்துள்ள தாக புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அன்றே கிருஷ் ணன், செந்தில்குமார் ஆகிய முக வர்கள் விவசாயிகளின் விளை பொருட் களுக்கு வழங்க வேண்டிய 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரபு விடம் வழங்கினர். ராஜா, அசோக் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.