tamilnadu

ரூ. 85 ஆயிரம் நிதியளிப்பு

தோகைமலை, ஆக.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க - நிதியளிப்பு பொதுக்கூட்டம் கரூர் மாவட்டம் தோகைமலை பேருந்து நிலையம் அருகில் கடந்த ஜூலை 27 அன்று ஒன்றியச் செயலாளர் கே.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. பி.முருகேசன் வரவேற்றார். ஏ.முனியப்பன், ஆர்.சங்கப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு சார்பில் ரூ.85 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.  எம்.பி. ரத்தினம் நன்றியுரையாற்றினார்.