சண்டே எக்ஸ்பிரஸ்
இந்திய விளையாட்டு உலகில் கிரிக்கெட், டென் னிஸ், ஹாக்கி, பேட்மிண்டன், ஸ்குவாஷ், கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு நல்ல வர வேற்பும், தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. எனினும் கிரிக்கெட் விளையாட்டு தான் இந்தியாவின் முதன்மை விளையாட்டுப் போட்டியாக உள்ளது. கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இதற்குக் காரணம் அசாரு தீன், கங்குலி ஆகியோர் தான். கபில்தேவ் இந்தியாவிற்கு உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்தாலும் அசாருதீன், கங்குலி ஆகியோரின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி அதிரடி வியூகம், பலமான பார்ம், சண்டை சச்சரவு என இந் திய கிரிக்கெட் அணி நவீன முறையில் எழுச்சிபெற்றது. 2000-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டி யை ரசிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதுடைய ரசி கர்களாக இருந்தனர். 2002-ஆம் ஆண்டு அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கங்குலி இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்து ஜெர்சியை கழற்றி சுற்றினார். அன்று முதல் இன்று வரை சின்னஞ்சிறு விவரம் அறியாத மழலைகள் கூட ஸ்கோர் கேட்கும் நிலைமையில் கிரிக்கெட் வளர்ந்துள்ளது. இத்த கைய சிறப்புடைய இந்திய கிரிக்கெட்டிற்கு எதிராக புதிய பாதையில் பயணித்து வரும் புரோ கபடி விரைவில் இந்தி யாவில் கிரிக்கெட் போட்டியை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் களமிறங்கி வருகிறது. குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் இந்த புரோ கபடி லீக் தொடரின் எழுச்சியைப் பற்றிப் பார்ப்போம்:
புரோ கபடி லீக் எழுச்சி
ஐபிஎல் தொடரைப் போலக் கபடிக்கும் பிரீமியர் லீக் தொடர் நடத்த இந்தியக் கபடி சங்கம் 2014-ஆம் ஆண்டு முடி வெடுத்து அந்த ஆண்டே முதல் சீசனை நடத்தியது. முத லிரண்டு சீசன் வட இந்தியாவில் மட்டுமே பிரபலமானது. 2016-ஆம் ஆண்டு பாட்னா அணியின் நட்சத்திர வீரர் பிரதீப் நார்வலின் அசத்தலான ஆட்டத்தால் புரோ கபடி புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. புரோ கபடி மைதா னங்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்களின் ஆர்வத்தைக் கண்ட புரோ கபடி நிர்வாகம் 2016-ஆம் ஆண்டு இரண்டு சீசன்களை நடத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அந்த இரண்டு சீசன்களிலும் பாட்னா அணி சாம்பியன் பட்டம் வென்றது மட்டுமல்லாமல் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 5-வது சீசனிலும் வெற்றி வாகை சூடி ஹாட்ரிக் வரலாறு படைத்தது. 5 சீசன் கபடி தொடரும் 8 அணிகள் கொண்டதாக நடைபெற்ற நிலையில், 6-வது சீச னில் (2018) தமிழ்நாடு, குஜராத் எனக் கூடுதலாக 4 அணி கள் சேர்க்கப்பட்டு அணிகள் எண்ணிக்கை 12 ஆனது. புரோ கபடி தொடரின் புதிய எழுச்சி காலம் 6-வது சீசன் எனலாம். அணிகளின் எண்ணிக்கையால் போட்டி களின் எண்ணிக்கை அதிகரித்தது. 3 மாதங்கள் லீக் தொடர் நடைபெற்றதால் ரசிகர்கள் மத்தியில் திகட்டாத வரவேற்பு பெற்றது. 2018-ஆம் ஆண்டு சீசனில் பெங்களூரு அணி யின் இளம் புயல் பவன் ஷெராவத்தின் அதிரடி ரைடு இந்திய விளையாட்டு உலகின் இளசுகளுக்குப் பிடித்துப் போகவே புரோ கபடி தென்னிந்தியாவிலும் நல்ல வரவேற்பைப் பெற ஆரம்பித்தது.
திடீர் எழுச்சி எப்படி?
புரோ கபடி தொடர் மிகக் குறுகிய காலப் போட்டி யாகும். ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகரும் இந்த தொடர் 40 நிமிடம் (இடைவேளை எல்லாம் சேர்த்து 1 மணி நேரம் ஆகும்) நடைபெறும். புரோ கபடி தொடரில் ஆதிக்கம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கிடையாது. புரியும் படி சொன்னால் எந்த அணி இந்த போட்டியில் வெல்லும் என முன்கூட்டியே ஆருடம் கூற முடியாது. வீரர்கள் முரட்டுத் தனமாகப் பட்டையைக் கிளப்புவதால் இளசுகள், இளம்பெண்கள் ஆவலுடன் ரசிக்கிறார்கள். ஒவ்வொரு ரைடிலும் வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து விளையாடு வதால் சூதாட்டம் என்ற பேச்சுக்கு இடமில்லை. இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே கபடி தொடர் கிரிக்கெட்டை பின்னுக்குத்தள்ளி மக்கள் மத்தியில் புதுவரனாக அடி யெடுத்துள்ளது.
அம்பானி மனைவியின் கனவு தகர்ந்தது
பிரதமர் மோடி அவர்களின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி ஐஎஸ்எல் தொடர் மூலம் கால்பந்தை இந்தியாவில் பிரபலப்படுத்த பல்வேறு வகையில் முயற்சி செய்தார். இதற்காக விருதும் வென்றார். ஐஎஸ்எல் கால்பந்து தொடரும் புரோ கபடி தொடங்கிய காலத்தில் (2014) தான் தொடங்கப்பட்ட நிலை யில், நிதா அம்பானியின் வியூகம் மலை நோக்கி முன்னேறி னாலும் தற்போது சரிவில் தான் பயணிக்கிறது. ஆனால் புரோ கபடி தொடர்மலை உச்சிக்குச் சென்றுவிட்டது.
புரோ கபடி தொடரின் முக்கிய வில்லன் ஐஎஸ்எல் கால்பந்து அல்ல... கிரிக்கெட் தான்.. இன்னும் இரண்டு வருடங்களில் இந்திய விளையாட்டு உலகில் புரோ கபடி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
- சதீஸ் முருகேசன்