குழித்துறை, ஜூன் 20- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சமூக இடைவெளி இல்லாமல் மீன் வியாபாரம் நடைபெற்று வருவது கோவிட் பரவலுக்கு வழிவகுக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தினந்தோறும் காலை யில் நடைபெற்று வரும் மீன் ஏலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். அதையொட்டி, சனியன்று காலையிலும் மீன் ஏலம் நடைபெற்றது. மீன் வியாபாரிகளும் பொதுமக்களும் நூற்றுக்க ணக்கானோர் திரண்டு இருந்தனர். ஏலம் நடைபெற்ற இடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொது மக்களிடம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த னர். ஆனால், சமூக இடைவெளி பின்பற்றுவ தில் பொதுமக்கள் தயக்கம் காட்டினர். இதனால் சிறிது நேரம் ஏலம் நிறுத்தப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றச் செய்தனர். தற்போது, மீன்பிடி தடை காலம் காரண மாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத தால் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டு மரங்களில் கொண்டுவரப்படும் சிறிய அள விலான மீன்களே ஏலம் விடப்பட்டன. இத னால் மீன்கள் குறைவாகவும் பொதுமக்க ளின் கூட்டம் அதிகமாகவும் காணப்பட்டது. குறுகிய இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி தொடர்ந்து இப்பகுதியில் கேள்விக்குறியாகவே உள்ளது.