tamilnadu

img

குடிநீர் இணைப்பில் பண மோசடியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூலை 26- குமரி மாவட்டம் தர்மபுரம் ஊராட்சியில் வீட்டுக் குடிநீர் இணைப்புக்காக பல்லாயிரக்க ணக்கில் மோசடி செய்த ஊராட்சி தலைவி மற்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடாக வசூல் செய்த தொகையை திரும்ப வழங்கவும், அனைவருக்கும் இலவசமாக இணைப்புகள் வழங்கிடவும் வலி யுறுத்தி தர்மபுரம் ஊராட்சி அலு வலகம் முன்பும், கேசவன்புதூர், செம்பொன்கரை, மணிக்கட்டிப் பொட்டல், ஈத்தாமொழி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் இராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் எஸ்.டி. ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரேசன், உஷா, சிவகோபன், கிளைச் செயலாளர்கள் மனோ கரன், ரவீந்திரன், லதா, ஜானகி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  இப்போராட்டத்தை தொடர்ந்து பலருக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.