நாகர்கோவில், ஜூலை 1- உடுமலை சங்கர் வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வேறொரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தும்பகோடு வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்எஸ்.சி. ஸ்டாலின் தாஸ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜீஸ் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாத்துரை, வட்டார செயலாளர் பி.விஸ்வம்பரன், ஜே.சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.