நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
கடலூர், ஜூலை 24- கடலூர் மாவட்டத்தில் தற்போது 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பள வில் குறுவை சாகுபடி முடிவடைந்து அறுவடை பணிகள் துவங்கி உள்ளன. ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம் வட்டாரங்களில் மட்டும் 6400 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை நடைபெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் கடந்த ஜூலை 19 ஆம் தேதி ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் கே.தொழுர், எம். பி.அகரம், சி. கீரனூர், நாச்சியார் பேட்டை ஆகிய 4 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்தது. கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று மேலும் 8 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் தேத்தாம்பட்டு, ஸ்ரீநெடுஞ்சேரி, அம்புஜவல்லி பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், ஆனந்தகுடி ஆகிய இடங்களிலும், விருத்தாசலம் வட்டத்தில் ராஜேந்திர பட்டினம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் வெட்சியூர், புவனகிரி வட்டத்தில் மருதூர் ஆகிய 8 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவைகள் உடனடியாக செயல்படும் என்று வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.
வேலூரில் ஆக.5 பொது விடுமுறை
வேலூர், ஜூலை 24- வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதி களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- வேலூர் மக்களவைத் தொகுதி தேர்த லுக்கான வாக்குப் பதிவு வரும் 5 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. வாக்குப் பதிவானது வேலை நாளான திங்கள்கிழமை நடைபெறுவதால், அந்த மக்களவைத் தொகு திக்குட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பினை அளிக்க வேண்டும். வேலூர் மற்றும் அந்தத் தொகுதிக்குட்பட்டு வரக்கூடிய அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும். அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அரசு நிர்வகிக்கும் அமைப்புகள், அனைத்துக் கல்வி நிலையங்கள் ஆகியன வரும் 5ஆம் தேதியன்று மூடப்பட்டு இருக்கும் என்று தனது உத்தரவில் தலை மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.