சிதம்பரம், மார்ச் 16- கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவ ரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. சதுப்பு நிலக் காட்டில் தமிழக சுற்றுலா மையம் சார்பில் அமைக்கப்பட்ட படகு குழாமில் சுற்றுலா பயணி கள் படகு சவாரி செய்து வந்தனர். இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொ ரோனா வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 ஆம் தேதி வரை படகு சவாரியை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்றும், பொது மக்கள் யாரும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வர வேண்டாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார். அதேபோல் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் வரவேண்டாம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் வெளிநாட்டு பயணி கள் மற்றும் பொதுமக்களை மருத்துவக்குழு சோதனை செய்து கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர்.