tamilnadu

இருளர் இனமக்களுக்கு அடிப்படைவசதி செய்து தர வலியுறுத்தல்

சிதம்பரம்,பிப்.24- சிதம்பரம் சாராட்சியர் விசு மகாஜனை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப் பட்டை ஒன்றியச் செயலாளர்  எஸ்.ஜி. ரமேஷ்பாபு, கொத்தட்டை கிராமத்தில்  வசித்து வரும்  இருளர் இன மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இலவச  வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.  ஆனால் கொடுக்கப் பட்ட இடத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்காமல் வேறு ஒரு  இடத்தில் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.   இதன் விளைவாக கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக  எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் அவதிப்பட்டு  வருகிறார்கள். எனவே, அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். அந்த இடத்தில் புதிய  வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்