கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜமாத் அமைப்பு சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. இதில் சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன், புவனகிரி வட்டாட்சியர் சுமதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் ஜோதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சமூக ஆர்வலர் முத்துராஜா ஆகியோர் உடனிருந்தனர்.