கடலூர், ஜூன் 8- கடலூர் மாவட்டத்தில் நலவாரி யத்தில் பதிவு செய்துள்ள 69 ஆயி ரம் முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 2,000 ரூபாய் நிவாரணத் தொகை கிடைக்க வில்லை. அனைவருக்கு. நிவாரணத் தொகை வழங்கக் கோரி சிஐடியு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கட்டு மானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியத்தில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் சுமார் 69 ஆயிரம் பேருக்கு புதுப்பிக்கவில்லை. ஆதார் இணைக்கவில்லை என்பதை கார ணம் காட்டி தமிழக முதலமைச்சர் அறிவித்த கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கப்படவில்லை.
நலவாரியப் பட்டியலில் உள்ள பல ருக்கும் நிவாரணத் தொகை சென்று சேரவில்லை. எனவே, புதுப்பித்தல், ஆதார் இணைப்பு இல்லை என்பதை கார ணம் காட்டாமல் வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் நிவார ணத் தொகை வழங்க வேண்டும், மினிமம் பேலன்ஸ் இல்லை என வங்கி களில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப பயனாளிகளுக்கு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும், நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் பெறு பவர்களுக்கு கடந்த 9 மாதமாக வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலு வைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளதால் தொழிற்சங்க நிர்வாகிகள் மூலம் பதிவு புதுப்பித்தல் கேட்புமனுக்கள் பெறு வது ஆகியவற்றை பெற்று பணி களை துவக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்கா ணிப்புக் குழு கூட்டத்தை நடத்தி நல வாரிய குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட லூர் செம் மண்டலம் அமைப்புசாரா நல வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் டி. பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பி.கருப்பை யன், மாநிலக்குழு உறுப்பினர் வி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகி கள் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம், ஆர்.ஆளவந்தார், திருமுருகன், வி.சுப்புராயன், ஏ.பாபு, சாவித்திரி சாந்தகுமாரி, உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரனை சந்தித்து மனு அளித்தனர்.