tamilnadu

நில அளவைக் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு

திண்டுக்கல், ஜுலை 31- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்ட அலுவலகத்தில்  நில அளவைக் கட்ட ணம் 40 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.நில அளவையில் புஞ்சை நிலத்தில்  உட்பிரிவு செய்ய   ரூ.30 வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.1,000-மாக வும், மேல் முறையீட்டின் பேரில் மறு அள வீட்டுக்கு ரூ.60-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   நஞ்சை நிலத்தில் உட்பிரிவு செய்ய ரூ.50-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு பேரில் மறுஅளவீடு செய்ய ரூ. 60 ஆக இருந்தது ரூ.4 ஆயிரமாக  உயர்த்தப் பட்டது.  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக குஜிலியம்பாறை யில் ஆர்ப்பாட்டம் தம்பிமுத்து தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ராஜரத்தினம், விவசா யிகள் சங்க தங்கவேல், ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.