மதுரை, ஏப்.12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகரில் வாலிபர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மக்களுக்குத் தேவையான அத்திவசியப் பொருட்கள் வழங்குவது, சாலையோரங்களில் வசித்து வருபவர்களுக்கு உணவு வழங்குவது, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தேனீர் வழங்குவது, தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது. வாகனங்களில் சென்று காய்கறி விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிருமி நாசினி தெளித்த வாலிபர் சங்கம்
வாலிபர் சங்கத்தின் தெற்குவாசல் பகுதி ஜான்சிராணி பெண்கள் கிளை சார்பாக காமராஜர்புரம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கிளைச் செயலாளர் கவிதா, தலைவர் ஜனனி, துணைச் செயலாளர் யோகேஸ்வரி, துணைத் தலைவர் அமலா ரோஸ்லின் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பாவெல் சிந்தன், வடிவேல். சதாம் ஹுசைன், ராமமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர்.
கொரோனா பணியில் அரசு ஊழியர் சங்கம்
கொரோனாவால் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில் மதுரை மதிச்சியம் பகுதியில் உள்ள கிராமியக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றை வாலிபர் சங்க நிர்வாகிகள் பி.கோபிநாத், வழக்கறிஞர் கார்த்தி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
மாற்றுத்திறனாளிகள்
மதுரை மேலப் பொன்ன கரத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் மற்றும் உரிமைகளுக்கான சங்கம், எல்ஐசி காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கு பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டன. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் சேகர், சித்ரா, மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகி பாண்டி, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலப்பொன்னகரம் பகுதிகுழு சார்பில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன், வை. ஸ்டாலின் உள்ளிட்டோர் கட்சி உறுப்பினர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர்.