tamilnadu

img

தொடர் விடுமுறையால் சீசன் முடிந்தும் குற்றால அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

குற்றாலம், அக். 6 - ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி விடப்பட்டுள்ள தொடர் விடுமுறையால் நெல்லை மாவட்டம் குற்றாலம், தேனி மாவட்டம் சுருளி அருவி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக வந்து செல்கின்றனர். சீசன் முடிவடைந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து உள்ளது. இந்த நிலை யில் தொடர் விடுமுறையை கழிக்கும்பொருட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளில் குளித்துச் சென்ற வண்ணம் உள்ளனர். 

ரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது. இந்தநிலையில் தொடர்விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் சுருளி அருவியில் குளித்துச் செல்கின்றனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும், பழைய மாதா ஆலயம், நடுத்திட்டு, தியானகூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் குடும்பங்களுடன் சென்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் அதிகாலை முதலே குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் குளித்துச் செல்கின்றனர். இதனால் படகு சவாரி, சிறிவர் பூங்கா,  நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. உதகை தாவர வியல் பூங்காவில் இரண்டாவது சீசனையோட்டி வைக்கப் பட்டுள்ள கண்கவர் மலர் கண்காட்சியை குடும்பத்துடன் கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நீராவி எஞ்சினுடன் இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.